@
குட்டி மீன்
கடித்துப் போகிறது
தூண்டில்காரன்
கால்களை!
@
சர்க்கஸ் சிங்கம்
வெறித்துப் பார்க்கிறது
கூண்டிற்குள் அசையும்
செடியை!
@
மனிதன் நெருங்குகையில்
பறந்துவிடும் பறவைகள்
பாவம் மரங்கள்!
@
புறப்படும் நேரம்
எழுதி விட்டு வருகிறேன்
ஒரு கவிதையின்
முதல்வரியை!
@
அசையும் மரத்துண்டில்
கடக்கிறது நத்தை
ஒரு பூகம்பத்தை!
@
கோடை மதியம்,
குவளையை நெருங்கும்
எறும்பும் என்
தாகமும்!
@
இலையுதிர் மதியம்,
திடீர்மழையில்
சருகு
கூச்சலிட்டடங்கும்!
@
ஆடிக் காற்று,
கிழிந்த காகிதம்
பறக்கிறது
வண்ணத்துப்பூச்சியுடன்!
@
வேறொன்றுமில்லை,
என் கையில்
உன் கைக்குட்டை!
@
மூங்கில் காடு,
ஏதோவொரு குருவி
பதில் பாட்டிசைக்கிறது!
@
உலுக்காதே
உதிர்வதில்லை
வண்னத்துப்பூச்சிகள்!
No comments:
Post a Comment
மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...