Saturday, April 9, 2016

ஆதிப் பெருங்காமம்


@
இலைகளை உதிர்த்தபடி
மரத்தினுள் நுழைகிறது வெய்யில்,
இலைகள் உதிர உதிர
வெய்யிலுக்குள் நுழைகிறதொரு மரம்,
கடைசியிலையும் உதிர்ந்த கணம்
கைநீட்டியபடி நிற்குமொரு மரத்தை
அத்தனை தாபமாய் புணர்கிறது வெய்யில்,
மரத்தின் காலடியில் வழிந்து
பரவிக் கிடக்கிறது
ஒரு மரத்தின் ஆதிப் பெருங்காமம்
கறுப்புக் கோடுகளாய்!
-வைகறை

1 comment:

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...