ஒவ்வொரு வீடாய்த்
தேடிக் கொண்டிருக்கிறது
அந்தக் குருவி
தான் கூடு கட்டியிருந்த
மரத்தை.
மேசையாய்;
நாற்காலியாய்;
கட்டிலாய்;
ஏதோவொரு வீட்டில்
ஒடுங்கிப் போயிருக்கலாம்
அதன் உலகம்.
யார் கண்டது?
விரட்டியடிக்கும்
யாரோவொருவர்
இழுத்தடைக்கும்
சாளரக் கதவாகக்
கூட
இருக்கலாம் அதன்
உலகம்.
அப்படி யென்றால்
நீங்களும் கேட்கலாம்
சாளரத்தின் விசும்பலோசையை
மரங்களின் பாசை
தெரிந்திருந்தால்.
( ஏப்ரல்-2013 கணையாழி )
No comments:
Post a Comment
மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...