Tuesday, October 7, 2014

உலகம்


ஒவ்வொரு வீடாய்த்
தேடிக் கொண்டிருக்கிறது
அந்தக் குருவி
தான் கூடு கட்டியிருந்த
மரத்தை.

மேசையாய்;
நாற்காலியாய்;
கட்டிலாய்;
ஏதோவொரு வீட்டில்
ஒடுங்கிப் போயிருக்கலாம்
அதன் உலகம்.

யார் கண்டது?
விரட்டியடிக்கும் யாரோவொருவர்
இழுத்தடைக்கும்
சாளரக் கதவாகக் கூட
இருக்கலாம் அதன் உலகம்.

அப்படி யென்றால்
நீங்களும் கேட்கலாம்
சாளரத்தின் விசும்பலோசையை
மரங்களின் பாசை தெரிந்திருந்தால்.
( ஏப்ரல்-2013 கணையாழி )

No comments:

Post a Comment

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...