@
ஆழக் கிணறு,
தூண்டிலுடைக்கும்
கல்லை
முத்தமிடும் மீன்கள்!
@
திடீர்மழை,
குடைபிடிக்க மறுக்கிறான்
சாலை ஓவியன்!
@
படிக்கத் தெரியாத
என் தாத்தா
இதோ...
படிக்கப்படுகிறார்!
@
மழையை எழுதப்
பேனா எடுத்தவனை
அழிக்கத் தொடங்கும்
மழை!
No comments:
Post a Comment
மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...