Thursday, September 17, 2015

ஏதோ முணுமுணுத்தபடி


கிராமத்துப் பள்ளிக்கூடம்,
கொடியேற்றுப் பயிற்சி.
'நேர் நில்'லென
சப்தமாய் குரல் கொடுக்கிறான்
மாணவர்த் தலைவன்.
அதுவரை
காற்றில் விளையாடிக் கொண்டிருந்த
பள்ளிவளாக மரமொன்று சட்டென


ம்
ஆனது.
மீண்டும் குரல் கொடுக்கிறான்
'தளர்ந்து நில்'லென.


ம்
மீண்டும் மரமாகப் படுத்து
அதன் இரண்டாம் எழுத்தில்
ஏறிக் கொண்டிருந்த ஒரு எறும்பிற்குப்
படுக்கையானது.
மீண்டும் 'நேர் நில்'லெனக்
குரல் கேட்ட போது
எழுந்து நடக்கத் தொடங்கியிருந்தாள்
அம்மரத்தினடியில் அமர்ந்திருந்த
மூதாட்டியொருத்தி
ஏதோ முணுமுணுத்தபடி!
-வைகறை

10 comments:

  1. அருமை
    முதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகின்றேன்
    இனி தொடர்வேன்

    ReplyDelete
    Replies
    1. மகிழ்கிறேன் அய்யா!

      Delete
  2. Replies
    1. மகிழ்வும், நன்றியும் அய்யா!

      Delete
  3. அடடா!! மரமாகவே உறைந்து நின்றுவிட்டேன் நானும்:) அண்ணா! செம !! செம!!

    ReplyDelete
    Replies
    1. மைதிலி மேடம், மகிழ்ச்சி..... வேற சொல்ல வார்த்த வரல!

      Delete
  4. வாழ்த்துகள் வைகறை பின்பற்றுவோர் பெட்டியை இணையுங்கள் தொடர்வோம்

    ReplyDelete
    Replies
    1. சேர்த்து விட்டேன் அய்யா!

      Delete
  5. அருமை தம்பி..

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வும், நன்றியும் அக்கா!

      Delete

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...