Wednesday, March 2, 2016

கவிதைக்குள் அலையும் மனச்சிறகு….



“ஒரு அனுபவம், தன்னைக் கவிதையாக்கும் தருணத்திற்காக கவிஞனின் விரல்பிடித்துக் கொண்டு ஆண்டுக்கணக்கில் பயணிக்கிறது” க.அம்சப்ரியா அய்யாவின் “கவிதைக்குள் அலையும் மனச்சிறகு” சிறுநூலின் இவ்வரிகளைக் கடக்கும் போது இன்னும் நெருக்கமாகத் தொடங்கியது அக்கட்டுரை எனக்கு.
ஆறு நீராலனது என்பதைப் போல க.அம்சப்ரியா கவிதைகளானவர் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இக்கட்டுரை. நம்மை விரல் பிடித்து கவிதைகளுக்குள் அழைத்துச் சென்று உடன் பயணிக்க வைக்கிறது; உடன் சேர்ந்து சிலாகிக்க வைக்கிறது அவரது மொழிநடை.
இத்தொகுப்பில் இடம்பெற்றிருப்பது இரண்டு கட்டுரைகள் மட்டுமே; பக்க அளவில் 24 பக்கங்கள் மட்டுமே! ஒரு தேநீர் அருந்தும் நேரம் போதும் இதை வாசித்து முடிக்க. விலையும் ஒரு தேநீருக்கானதுதான்.
கவிதைக்குள் அலையும் மனச்சிறகாய் நம்மை மாற்றிக் காட்டுகிற இந்நூல் கவிதையை நேசிப்பவர்கள் வாசிக்க வேண்டிய நூல்.
வாழ்த்துகள் அய்யா! நல்ல முயற்சி!! மேலும் பல கட்டுரைகளை எதிர் பார்க்கிறோம்!!!
நூல் வாங்க:-
கவிஞர் க.அம்சப்ரியா: 9095507547

1 comment:

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...