Tuesday, October 7, 2014

நிரப்புக...


@
காற்றடி இரவின்
விட்டு விட்டு
கேட்டுக் கொண்டேயிருக்கும்
தூரத்து ஜன்னற் கதவின்
தட்டலோசைகள்
நிரப்பிக் கொண்டிருக்கின்றன
வராது நழுவிக் கொண்டிருக்கும்
அவனது
உறக்கத்தின் இடைவெளிகளை!

No comments:

Post a Comment

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...