Tuesday, October 7, 2014

கோடைநதி


@
மணலெனக் கிடக்கும்
இந்தக் கோடை நதியை
வசதியாய்
பாலத்திலேயேக் கடந்து விடுங்கள்;
பாதம் புதைய
மணலில் நடக்கத் துணியாதீர்!

அதையும் மீறி
நடக்கத் துணிந்தவர்கள்
புதைந்து கிடக்கும் கூழாங்கல்லைக்
கையிலேந்த முயலாதீர்!

ஒரு நண்பகலில்
சில கூழாங்கற்களை என் கையை
சுள்ளெனச் சுட்டது...
ஒரு நதியின் கோபத்தோடு!

ஆம்..
நதியற்றுக் கிடக்கும்
கோடை மணலும்
நதிதான்!

No comments:

Post a Comment

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...