Tuesday, October 7, 2014

சொல்ல முடியாதவை


@
அந்தக் குளத்தில்
அழகாய் பரவிக் கொண்டிருக்கும்
நீர்வளையங்களை
வருணிக்க நீயோ
வார்த்தைகளைத் தேடிக் கொண்டிருக்கிறாய்,
உன் ஏதாவதொரு வார்த்தையால்
சொல்ல முடியுமா...
வேகமாய்
சுண்டியிழுக்கப்பட்ட போது
குளமெங்கும் விரிந்த அதன்
மரணவலியை!

No comments:

Post a Comment

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...