@
ஆடாமல் அசையாமல்
அமைதியாய் இருக்கிறாய்
நீ
மணலோடு
வானிலையை வாசிக்க
அவ்வப்போது
வானம் பார்க்கத்
தேவையில்லை
எனக்கிப்போது
வெறுமையாய் கிடக்கிறாய்
நிம்மதியாய்
எந்தச் சடலமும்
சுமக்காமல்
அழுகைக்கானதா;
புன்னகைக்கானதா;
தன் அடுத்த தருணம்
எதுவென
எதிர்பார்க்கும்
தேவையில்லை
கரையோரக் கண்களுக்கு
எல்லாவற்ரையும்
விடக்
கரையேறுவோமா எனற
சந்தேகம் ஏதுமில்லை
உன்னிடம்...
என்னிடமும்!
No comments:
Post a Comment
மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...