Tuesday, October 7, 2014

சடலம் சுமக்காமல்


@
ஆடாமல் அசையாமல்
அமைதியாய் இருக்கிறாய் நீ
மணலோடு

வானிலையை வாசிக்க
அவ்வப்போது
வானம் பார்க்கத் தேவையில்லை
எனக்கிப்போது

வெறுமையாய் கிடக்கிறாய்
நிம்மதியாய்
எந்தச் சடலமும் சுமக்காமல்

அழுகைக்கானதா;
புன்னகைக்கானதா;
தன் அடுத்த தருணம் எதுவென
எதிர்பார்க்கும் தேவையில்லை
கரையோரக் கண்களுக்கு

எல்லாவற்ரையும் விடக்
கரையேறுவோமா எனற
சந்தேகம் ஏதுமில்லை
உன்னிடம்...
என்னிடமும்!

No comments:

Post a Comment

மகிழ்வுடன் கூறுங்கள் தங்கள் மேலான கருத்துக்களை...

Related Posts Plugin for WordPress, Blogger...